பரமத்தி வேலூர் அருகே 3 மாணவிகள் மாயம்!!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகள் லோகேஸ்வரி (17). அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சத்யா (16), முருகேசன் மகள் வித்யபாரதி (16) ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் மாணவி லோகேஸ்வரி பிளஸ்–1 வகுப்பும், சத்யா, வித்யபாரதி ஆகியோர் 10ம் வகுப்பும் படித்தனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர்கள் மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து 3 மாணவிகளையும் தேடிவருகிறார். அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது வெளியூருக்கு சென்றார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
Average Rating