அரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்!!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிஷா (20). இதே ஊரை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அருண் (26). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் மோனிஷா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிக்லிங் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மோனிஷா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மோனிஷாவின் தந்தை ரமேஷ் கோட்டப்பட்டி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 10 மாதத்திலேயே இளம்பெண் இறந்ததால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Average Rating