ஆம்பூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!
Read Time:50 Second
ஆம்பூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் குப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் மகாலெட்சுமி (20) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் குருவராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (22) என்பவரும் காதலித்து வந்தனர்.
இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் தம்பதியை அனுப்பி வைத்தனர்.
Average Rating