திண்டுக்கல்: திருமண ஆசைக்காட்டி பெண்ணை கற்பழித்த போலீஸ்காரருக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 54 Second

7e235f07-9b9f-483d-80e7-01d1a9492e3c_S_secvpfதிண்டுக்கல் ரெட்டியபட்டியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகள் யூஜிலின்மேரி (வயது27). இவர் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு சென்றேன். அப்போது அங்கு சிறைகாவலராக பணியாற்றிய நெல்லை மாவட்டம் தென்காசி மங்களாபுரத்தை சேர்ந்த அருண்குமார் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை கற்பழித்தார்.

தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி போலீஸ்காரர் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், யூஜிலின்மேரி குற்றம் சாட்டியுள்ள சிறைகாவலர் அருண்குமார் திண்டுக்கல் மாவட்ட சிறை அலுவலர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வேலைக்கு வராமல் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு சிறை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் ‘ஆப்சென்ட்’ என பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடி வருகிறோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர்!!
Next post பெண் வல்லுறவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்!!