உ.பி.யில் தலித் சிறுமி கற்பழித்து கொலை!!
உத்தர பிரதேச மாநிலம் பதான் நகரின் சிவில் லைன் பகுதியில் தலித் சிறுமி ஒருவர், 3 வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 வயதான அந்த சிறுமி நேற்று மாலை தண்ணீர் பிடிக்க வெளியில் சென்றபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரசாந்ந் அரோரா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து கடத்திச் சென்று கொடூரமாக கற்பழித்துள்ளனர்.
பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அந்த சிறுமி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவளது நிலைமை மோசமடைந்ததால் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். பின்னர் வீட்டிற்கு கொண்டு வந்ததும் அந்த சிறுமி இறந்துவிட்டார்.
முக்கிய குற்றவாளியான பிரசாந்த், வீட்டை பூட்டிவிட்டு கூட்டாளிகளுடன் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருவதாகவும் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
Average Rating