சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை!!

Read Time:1 Minute, 56 Second

77106e06-24f5-4ed4-8875-e6a3c8ae25ca_S_secvpfவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.தொட்டியாங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்றார்.

பின்னர் பி.தொட்டியாங்குளம் கிருஷ்ணாபுரம் செல்லும் வழியில் உள்ள பாலத்திற்கு கீழே வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

ஆனால் இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினார். இதை தொடர்ந்து திருச்சுழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, நேற்று தீர்ப்பு கூறினார்.

அதன்படி கணேசனுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டும், கொலை மிரட்டல் வழக்கில் 4 ஆண்டும் என 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசீந்திரம் பகுதியில் பேஸ்புக் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்!!
Next post கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது!!