செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: இளம்பெண் புகார்!!

Read Time:1 Minute, 50 Second

7b241a64-7e5c-4d03-a7bb-689de85deeaf_S_secvpfசெய்யாறு தாலுகா வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமரன்(27) திருமண மண்டப உரிமையாளர் இவரது மனைவி மோகனவள்ளி(21) இருவருக்கும் திருமணமாகி 3 வருடமாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

மோகனவள்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து வயிற்று கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். ஆனால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் எனவும், அதற்காக வேறு திருமணம் செய்து கொள்வதாகவும் குமரன் மோகனவள்ளியிடம் கூறி விவாகரத்து கேட்டுள்ளார். மேலும் இவரது குடும்பத்தினர் மோகனவள்ளியை துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மோகனவள்ளி தனது தாய் வீடான சித்தாத்தூருக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் குமரன் 2–வது திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த மோகனவள்ளி, கணவரை தட்டிக்கேட்டார். பின்னர் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சமரசம் செய்யப்பட்டு தற்போது மோகனவள்ளி கணவர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு மோகனவள்ளியை குமரன் மற்றும் அவரது தந்தை ராஜன், தாய் சாந்தி மற்றும் தனலட்சுமி ஆகியோர் கொடுமைபடுத்துவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!
Next post திரிஷாவுக்கு 1,000,000 ரசிகர்கள்!!