மனைவி போலீசில் புகார் கூறியதால் விஷம் குடித்து கணவர் தற்கொலை!!
தேனி அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் டொமினிக் சகாயராஜ் (வயது32). இவருக்கும் பிரேமா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே பிரேமா தனது கணவர், மாமனார், மாமியார் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் சகாயராஜிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
மனைவி பிரிந்த துக்கம் ஒருபுறம் இருக்க தன் மீதே மனைவி புகார் செய்து விட்டாரே என்ற வருத்தத்தில் சகாயராஜ் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating