பழனி அருகே முன் விரோதத்தில் கணவன்–மனைவி மீது தாக்குதல்!!
Read Time:57 Second
பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது44). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (42). இவர்கள் குடும்பத்துக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, அவரது மனைவி ஆராத்தாள், மகன் கிரிராஜா, உறவினர் சுதா ஆகியோர் சேர்ந்து மருதமுத்துவை தடியால் தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவி மகுடீஸ்வரியும் தாக்கப்பட்டார்.
இது குறித்து ஆயக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.
Average Rating