செஞ்சி நர்சு கொலையில் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்!!

Read Time:2 Minute, 24 Second

f6927b39-d8c9-4c81-a504-789dd1a0280d_S_secvpfஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி அலங்கார ராஜம் (வயது 36).

அலங்கார ராஜம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக சேர்ந்தார். 2012–ம் ஆண்டில் அவர் செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். செஞ்சி ராஜேந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து ராஜம் தனியாக வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை அவரது வீடு வெளிபக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே ராஜம் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே அவருடன் மேல்சித்தாமூர் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் மணிமாறன் (30) என்பவர் பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார். அவர், ராஜத்தை நான்தான் கொலை செய்தேன் என்று கோர்ட்டில் தெரிவித்தார்.

ராஜத்துக்கும், மணிமாறனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக ராஜம் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக மணிமாறன் கருதினார். இதனால் கோபமடைந்த அவர் ராஜத்தை கொன்றிருப்பது தெரியவந்தது.

மணிமாறனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு தான் கொலைக்கான முழு காரணங்களும் தெரியவரும்.

கொலை செய்யப்பட்ட ராஜமும், அவரது கணவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பே தனியாக பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு எலிட் புளூட்டன் என்ற பிளஸ்–1 படிக்கும் மகன் உள்ளான். அவன் தந்தையுடன் வசித்து வருகிறான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குன்னத்தூரில் கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை!!
Next post ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய மொடலுக்கு வாழ்க்கைத் துணை கிடைக்காமையால் வேதனை!!