எம் மண்ணில் அதற்கு அனுமதி கிடையாது!!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் நியூயோர்க நகரில் சந்தித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, எவ்விதமான தீவிரவாதச் செய்ல்களுக்கும் எங்கள் நாட்டு மண் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சுமார் 30 நிமிட ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷேக் ஹசினா, இந்தியப் பிரதமருடனான இந்த சந்திப்பு மிகவும் நன்மை பயப்பதாக அமைந்திருந்து என்று குறிப்பிட்டார்.
பெருகிவரும் தீவிரவாதம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஹசினா, ’நாங்கள் எப்போதுமே தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள். எங்கள் நாட்டு மண்ணை எவ்விதமான தீவிரவாத செயலுக்கும் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதை நான் வெளிப்படையாக அறிவித்துள்ளேன்.
தீவிரவாதத்தை எதிர்த்து நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். இனியும், தொடர்ந்து போராடுவோம்’ என்று தெரிவித்தார்.
Average Rating