விகாரையில் சமய கடமைக்காக தங்கியிருந்த 85 வயதான பெண் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது!!
தம்புத்தேகம, நல்லச்சிய, அமுகலாராமய விகாரையில் சமய கடமைக்காக தங்கியிருந்த பெண்ணொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
இரவு நேரம் விகாரைக்கு வந்த நபரொருவரே விகாரையில் தங்கியிருந்த 85 வயதுடைய பெண்ணை இவ்வாறு துஷ்பிரயோகததுக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவருகின்றது.
இவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார என்பதை சோதிப்பதற்காக அனுராதபுரம் சட்ட வைத்தியரின் உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating