கருக்கலைப்புச் செய்வது போன்று வேடமிட்டுச் சென்ற பெண் பொலிஸ் உதவியில் சுற்றி வளைக்கப்பட்ட நிலையம்!!
Read Time:51 Second
சட்டவிரோத கருக் கலைப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். சீகிரியா பிரதேசத்திலேயே இந்த கருக்கலைப்பு நிலையம் செயற்பட்டு வந்தது. சாதாரண பெண் ஒருவர் போல வேடம் தரித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அமர்த்தி இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி முற்றுகையின் போது கருச் சிதைவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து வகைகளும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Average Rating