(PHOTOS) உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி!!
கனடாவைச் சேர்ந்த யுவதியொருவர் உலகின் மிக அழகிய கிரிமினல் என வர்ணிக்கப்படுகிறார். குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை அதிகாரிகள் புகைப்படம் பிடித்து வெளியிடும் வழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
இத்தகைய படங்களில் ஒன்றை பார்த்த பலர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என நம்ப முடியாத அளவுக்கு அவரின் தோற்றம் காணப்பட்டது.
ஸ்டெஃபானி, பியோடொய்ன் எனும் யுவதி மருத்துவ தாதி மாணவியாவார். பார்வைக்கு மொடல் அழகிகள் போன்று காணப்படுகிறார்.
ஆனால், பெரும் கிரிமினல்களில் ஒருவர் அவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கனடாவில் பல கொள்ளை, திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் திருடுவதற்காக உடைத்து உட்புகுந்த வீடுகளின் எண்ணிக்கை 42. மொத்தமாக 114 குற்றச்சாட்டுகள் ஸ்டெஃபானி மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவ்வளவு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஸ்டெஃபானிக்கு இப்போதுதான் 21 வயது. அவரின் புகைப்படம் கனடாவின் மொன்ட்ரீயலை தளமாகக் கொண்ட பத்திரிகையயொன்றில் வெளிவந்ததையடுத்து உலகின் பல பாகங்களில் அறியப்பட்ட நபர்களில் ஒருவராகிவிட்டார் ஸ்டெஃபானி.
பார்ப்பதற்கு அப்பாவி போல் தோன்றும், ஸ்டெஃபானி, திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவி என்கின்றனர் கனேடிய அதிகாரிகள்.
ஆட்களற்ற வீடுகளை தருணம் பார்த்து உடைத்து உட்புகுந்து பொருட்களை திருடுவது இக்குழுவின் வழக்கமாம். இவரின் சகாக்களில் பலர் பதின்மர் வயதானவர்கள் எனத் தெரிவிக் கப்படுகிறது.
கடந்த திங்கட் கிழமை ஸ்டெஃபானி மீது மேலும் 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்ப ட்டன.
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த தாகவும் ஸ்டெஃபானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெஃபானியின் மனநிலையை மருத்துவர்கள் பரிசோதிக்கவுள்ளதாக அவரின் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஸ்டெஃபானி, கடற்கரையொன்றில் நீச்சலுடையுடன் சூரிய குளியலில் ஈடுபடும்போது பிடிக்கப்பட்ட பழைய புகைப்படமொன்றை கனேடிய பத்திரிகையொன்று இணையத்தளத்தில் வெளியிட்டது.
அதைப் பார்த்த இளைஞர்கள் பலர் மனம் குழம்பிப் போனார்கள். “இவள் என் இதயத்தை எப்போதும் திருடிவிடக்கூடும்’ என ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தன் மீதான சில வழக்குகளை எதிர்கொள்வதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஸ்டெஃபானி ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating