சிங்கப்பூர் அழகுராணியாக தெரிவான இளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்!!
கால்பந்தாட்ட மத்தியஸ்தர் ஒருவர் சிங்கப்பூரின் தேசிய ரீதியிலான அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். 20 வயதான தெல்ரீனா பூனம் கில் எனும் இந்த யுவதி மிஸ் வேர்ல்ட் சிங்கப்பூர் அழகுராணியாக தெரிவாகியுள்ளார். எதிர்வரும் உலக அழகுராணி போட்டியில் சிங்கப்பூர் சார்பாக தெல்ரீனா பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய அழகுராணிகளை விட தெல்ரீரான சற்று வித்தியாசமானவர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட அவர் கால்பந்தாட்ட அபிமானியாவார். பொதுவாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் கால்பந்தாட்ட மத்தியஸ்தராகவும் அவர் விளங்குகிறார்.
சிங்கப்பூரிலுள்ள மூன்றே மூன்று பெண் மத்தியஸ்தர்களில் மிக இளையவர் தெல்ரீனா என்பது குறிப்பிடத்தக்கது.மிஸ் சிங்கப்பூர் 2014 அழகுராணி போட்டிகளின் இறுதிச் சுற்று கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரின் வன் ஃபரேர் ஹொட்டேலில் நடைபெற்றது.
20 யுவதிகள் இறுதிச்சுற்றில் பங்குபற்றினர். இப்போட்டியில் தெல்ரீனா பூனம் அழகுராணியாக முடிசூட்டப்பட்டார். அவருக்கு 8,000 டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
1.71 மீற்றர் உயரமான தெரில்ரீனா, இன்னும் இரு வருடங்களுக்குள் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீஃபா) மத்தியராக விளங்கவேண்டும் என்ற இலட்சத்தையும் கொண்டுள்ளார்.
அழகுராணி போட்டிகள் தம்மை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கும் தம்மை பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகின்றன. இதுவே சிங்கப்பூரிலுள்ள சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் நான் பங்குபற்றுவதற்கு காரணம் என தெல்ரீனா தெரிவித்திருந்தார்.
இந்த அழகுராணி போட்டியில் தெல்ரீனா பூனம் முதலிடம் பெற்ற நிலையில், நான்யாங் தொழில்நுட்ப பல்லைக்கழக மாணவியான கிம்பர்லி லாம் (20) இரண்டாமிடத்தையும் நிதி ஆலோசகரான லோசியா லவீனா தோமஸ் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
25 வயதான லவீனா தோமஸ் இரண்hவது தடவையாக இப்போட்டியில் பங்குபற்றினார். இவர் ஏற்கெனவே 2012 உலக அழகுராணி போட்டியிலும் சிங்கப்பூர் சார்பாக பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating