மணிரத்தினத்திற்கு NO சொன்னார்.. காரணம்?

Read Time:1 Minute, 56 Second

pooja-hegdeஜீவா நடிப்பில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போன பூஜாவுக்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ஆஸ்டோஸ் கௌரிகர் இயக்கும் மொகஞ்சதாரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவரை நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால், இந்தியில் பிசியாக இருப்பதால் மணிரத்னம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பூஜா ஹெக்டே மணிரத்னம் படத்தில் இருந்து விலகியதற்குண்டான காரணங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்னை சந்தித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக் கொண்டார். அவர் அந்த படத்தின் கதையை என்னிடம் கூறியபோது அசந்துபோனேன். இருந்தாலும், தற்போது இந்தி படத்தில் பிசியாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க என்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. ஆகையால், மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிமஞ்சாரோ மலையில் 5730 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடி புதிய சாதனை!!
Next post விற்பனைக்கு வரும் பறக்கும் கார்கள்!!