கணவனை தேடி விருத்தாசலம் வந்த இளம்பெண் கடத்தல்: உறவினர்கள் மீது போலீசில் புகார்!!

Read Time:2 Minute, 24 Second

d0575647-51f7-43dd-9e93-a62ae48b82f7_S_secvpfவிருத்தாசலம் பழமலைநாதர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, இவரது மகன் தனசேகர் (வயது 28). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் தாசரிபட்டினத்தை சேர்ந்த துரைசாமியின் மகள் சுதமதி என்ற இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதற்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பும் என பயந்தனர்.
எனவே கடந்த ஜூன் 21–ந் தேதி 2 பேருடைய வீட்டுக்குத் தெரியாமல் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் கடலூரில் பதிவு திருமணம் செய்தனர். பிறகு கணவனும்–மனைவியும் அவரவர் வீட்டுக்கு சென்று வழக்கம் போல் வசித்து வந்தனர்.

இதுபற்றி அறியாமல் சுதமதிக்கு அவரது பெற்றோர் வரன் தேடினர். இதனால் பயந்த சுதமதி கடந்த 20–ந் தேதி வீட்டுக்கு தெரியாமல் விருத்தாசலம் வந்தார். கணவன் வீட்டில் தங்கினார்.

இதனை அறிந்த சுதமதியின் தாயார் செல்வி, உறவினர்கள் தங்கராசு, வேலுசாமி உள்ளிட்ட 13 பேர் விருத்தாசலம் வந்தனர். சுதமததியிடமும், தனசேகரிடமும் இங்கிதமாக பேசினர். இருவருக்கும் முறைப்படி கல்யாணம் செய்து வைப்பதாக கூறினர்.

அந்த வார்த்தைகளை நம்பி சுதமதியை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு தனசேகர் அனுப்பி வைத்தார். பின்னர் மனைவியுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேச முயன்றும் முடியாமல் தவித்தார். சுதமதியின் குடும்பத்தினரும் முறையாக பதில் அளிக்கவில்லை.

எனவே சுதமதியை அவரது குடும்பத்தினர் கடத்தி விட்டதாக விருத்தாசலம் போலீசில் தனசேகர் புகார் செய்தார். அதன்பேரில் செல்வி, தங்கராசு, வேலுசாமி உள்பட 13 பேர் மீது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!
Next post சொத்து பிரச்சினையில் மோதல்: தொழிலாளியின் முதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு!!