தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய்!!
Read Time:1 Minute, 0 Second
பிங்கிரிய – வீரபொக்குன – பொல்லன்தலுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார்.
விஷம் அருந்திய நால்வரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
7 வயது, 1 வயது 2 மாதம் நிரம்பிய பெண் குழந்தைகள் இரண்டு மற்றும் 5 வயது ஆண் குழந்தையும் தாயும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தாய் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating