மகனை காட்டில் விட்டதாய் சிறையில்: பொறுப்பேற்க மறுத்த தந்தை விளக்கமறியலில்!!
Read Time:52 Second
நான்கு வயது மகனை காட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயொருவருக்கு எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெபிதிகொல்லாவ மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கெபிதிகொல்லாவ – ஹதகல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிறுவனை அவனது தந்தையும் பொறுப்பேற்க மறுத்துள்ளார்.
இதனால் அவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating