ஜெயா பிணை மனு 6ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!
கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு பிணை கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிட இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை 6ம் திகதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இதேவேளை, தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள் போன்றவை இணையதளத்தின் பிரதான பக்கங்களில் வெளியிடப்ப ட்டிருந்தன.
தற்போது ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவர் பதவி இழக்க நேரிட்டது. எனவே அரசு இணையதளத்திலும் அவர் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் போடப்பட்டுள்ளன.
Average Rating