நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற வாலிபர்!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.
மாதத்தில் ஒரு முறை சொந்த ஊருக்கு செந்தில் வந்து செல்வாராம். கணவர் இல்லாத நேரத்தில் கார்த்திகாவுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எத்தக்கோவில் பகுதியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் வடமலையடி பட்டியில் கணவன்–மனைவி போல வசித்து வந்தனர். இதற்கிடையே ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த கார்த்திகா பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்தார். இதனை கருத்தப்பாண்டி கண்டித்து நீ யாரிடமும் பழக கூடாது என தடை போட்டுள்ளார்.
ஆனாலும் கார்த்திகா தொடர்ந்து தனது நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருத்தப் பாண்டி தனது கள்ளக்காதலி கார்த்திகாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல கார்த்திகா மில் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை தனது தோழிகளுடன் வீடு திரும்பினார்.
வீட்டிற்குள் அவர் நுழையும் போது ஏற்கனவே அங்கு அரிவாளுடன் பதுங்கி இருந்த கருத்தப்பாண்டி கார்த்திகாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். கள்ளக்காதலியை வெட்டி கொன்ற கருத்தப்பாண்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் போலீசில் சரண் அடைந்தார்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விரைந்து சென்று கார்த்திகாவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating