76 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை? ஜனாதிபதிக்கு நன்றி!!
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 76 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக இந்திய ஊடகமாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.
கடந்த 27-ம் திகதி ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.
இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தி ஹிந்து செய்திகள் குறிப்பிடுகின்றன.
மீனவர்கள் 76 பேரும் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மீனவர்களை விடுதலை செய்த இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள ராமேசுவரம் மீனவர்கள், கடந்த 4 மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 80-க்கும் அதிகமான விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Average Rating