ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!!
Read Time:1 Minute, 4 Second
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது 6 அல்லது 7-ந்தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது பற்றி மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி கூறியதாவது:–
வழக்கை விசாரிக்காமலேயே ஒத்தி வைத்த நீதிபதி ரத்னகலாவின் செயல் அதிர்ச்சி தருகிறது. இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating