தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!
Read Time:52 Second
தாம்பரம் இரும்புலியூர் டி.டி.கே. நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகள் ராதிகா (வயது 25). இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடமும் நகையை பறித்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த நகைகளையும் அள்ளிச் சென்றனர். மொத்தம் 20 பவுன் நகை– பணம் பறிபோனது. முகமூடி கொள்ளையர்கள் ஜட்டி மட்டும் அணிந்திருந்தனர். இருட்டில் அவர்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
Average Rating