மோடியை வாழ்த்திய அத்வானி: வாஜ்பாயோடு யாரையும் ஒப்பிட முடியாது என்றார்!!

Read Time:1 Minute, 50 Second

4d6ba5f2-4a8e-46b2-953f-bfaa75d32437_S_secvpfபா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான அத்வானி அகமதாபாத்தில் தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நரேந்திர மோடி, பிரதமாராக பதவியில் சிறப்பாக செயல்படுகிறார். பிரதமருக்கான பொறுப்பை உணர்ந்து மோடி உழைக்கிறார். இதனால் உலகளவில் மக்களின் புகழைப் பெற்றுள்ளார். பிரதம மந்திரி நாட்டை திறம்பட ஆட்சி செய்தால் மட்டும் போதாது. மேலும், மற்ற நாடுகளோடு உறவுகளை உருவாக்குவது மிகவும் அவசியம்.

தேர்தலோடு மக்களின் மனதை வென்றார். தற்போது உலக அளவில் மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளார்.

மோடி பிரதமராக வெற்றி பெற்றதும் என்ன நிகழப்போகிறது. மற்றவர்களுடன் எப்படி தொடர்பு வைத்துக்கொள்வார் என்று யோசனை இருந்தது. ஆனால், அவர் திறமையாக செயல்படுகிறார். அவர் மற்றுமல்ல மற்றவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்கிறார்கள். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.

இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல் சிறந்த பிரதமர் யாரும் இல்லை. வாஜ்பாயை போல் வேறொருவரை கற்பனை செய்து பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் திரையுலகை வலம் வரப்போகும் உலக அழகி!!
Next post துறைமுகத்தில் வாலிபர் குத்திக்கொலை: கடலில் உடலை வீசினர்!!