மோடி வீட்டின் அருகே தெருவை சுத்தம் செய்த கெஜ்ரிவால்!!
காந்தி பிறந்த நாளான இன்று ‘இந்தியாவை தூய்மைப்படுத்துவோம்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டை சாலையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதிலும் அனைவரும் இந்த திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
முதல் கட்டமாக செங்கோட்டை சாலையில் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்த மோடி, “இந்த திட்டத்தின் பலனை மத்திய அரசு சொந்தம் கொண்டாடாது. இந்த தூய்மைப்படுத்தும் இயக்கத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். இது இந்தியர்கள் அனைவரின் உழைப்பில் கிடைக்கும் பலனாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
மோடி செங்கோட்டை அருகே உரையாற்றிக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமர் மோடியின் இல்லம் அமைந்திருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலையை சுற்றியுள்ள பகுதிகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆதரவாளர்களுடன் சென்று சுத்தப்படுத்தினார்.
சென்னை உள்ளிட்ட நாட்டின் பல பெருநகரங்களிலும் இன்று இந்த தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
Average Rating