செவ்வாயை தொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மை படுத்த முடியாது?- மோடி கேள்வி!!
பிரதமர் மோடி இன்று காலை தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தூய்மையான இந்தியா என்ற காந்திஜியின் கனவு இதுவரை நிறைவேறவில்லை. தற்போதைய தூய்மை இந்தியா திட்டத்தை காந்திஜி பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவை தூய்மையாக்க முயற்சி செய்யும் அனைவருக்கும் நன்றி. இந்த திட்டத்தால் மத்திய அரசு ஆதாயம் அடைய முயற்சி செய்யவில்லை. குப்பைகளை பார்க்கும்போது அதைபடம் பிடித்து பதிவேற்றம் செய்யுங்கள். அதைபோல் தூய்மை படுத்திய பிறகு அந்த இடத்தை படம் பிடித்து பதிவேற்றம் செய்யுங்கள்.
ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டு முறை இந்தியாவை தூய்மை படுத்த முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அரசும் இந்த இயக்கத்தை செயல்படுத்த வேண்டும்.
செவ்வாயை தொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மை படுத்த முடியாது?
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் இந்தியை தூய்மை படுத்த வேண்டும் என்று மோடி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Average Rating