துறைமுகத்தில் வாலிபர் குத்திக்கொலை: கடலில் உடலை வீசினர்!!
Read Time:1 Minute, 2 Second
சென்னை துறைமுகம் கண்டெய்னர் பாயிண்ட் கடல் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் நேற்று மதியம் கரை ஒதுங்கியது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை.
அவரது கழுத்து அறுக்கப்பட்டு நெஞ்சில் 3 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
தகவல் அறிந்ததும் துறைமுகம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர் துறைமுகம் தொழிலாளியா? அல்லது வேறு யாருமா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொலை துறைமுகத்தின் உள்ளே நடந்ததா? அல்லது வெளியில் நடந்ததா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Average Rating