வேலூர் ஜெயிலில் ராஜீவ் கொலையாளி முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

Read Time:1 Minute, 21 Second

muugan(Rajiv-Murder).jpgராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன்-நளினி இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி பெண்கள் ஜெயிலிலும் உள்ளனர். இவர்களின் மகள் இலங்கையில் வளர்கிறாள். நளினி-முருகன் இருவரும் தங்கள் மகளை தமிழ்நாட்டில் படிக்க வைக்க விரும்புகிறார். இதற்காக மாணவருக்கு விசா வழங்க வேண்டும் என்று நளினியும், முருகனும் 6 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கிடையே விசா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று இலங்கை அரசு அறிவித்ததாக உறவினர்கள் மூலம் நளினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகனும், நளினியும் உண்ணாவிரதத்தை கை விட்டனர். ஆனால் இலங்கை அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதைத் தொடர்ந்து முருகன், நேற்று முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இன்று அவர் 2-வது நாளாக உண்ணாவிதம் இருந்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்-இங்கிலாந்து கால் இறுதியில் மோதல்
Next post சார்லி சாப்ளின் தொப்பி, கைத்தடி ரூ. 63 லட்சத்துக்கு ஏலம்