மட்டக்களப்பில் பெண்ணின் தாலிக்கொடி, தங்கமாலை பறிப்பு!!

Read Time:1 Minute, 24 Second

2105770209chain-robbery-மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருவோர் பெண்களின் நகைகளை பறித்துச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் மட்டக்களப்பு, திஸவீரசிங்கம் சதுக்கத்தில் பெண்ணொருவரின் தாலிக்கொடி மற்றும் தங்க மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அலுவலகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது தலைக்கவசம் அணிந்துவந்த இருவர் குறித்த பெண்ணின் தங்க ஆபரணங்களை பறித்துச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

எட்டு பவுண் தங்க நகைகள் இவ்வாறு பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துறைமுகத்தில் வாலிபர் குத்திக்கொலை: கடலில் உடலை வீசினர்!!
Next post சாதாரண கைதிகளை போலவே ஜெயலலிதா நடத்தப்படுகிறார்!!!