ஓசியில் மதுபாட்டில் தரமறுத்ததால் டாஸ்மாக் கடையில் ஊழியருக்கு பீர்பாட்டில் குத்து!!
Read Time:1 Minute, 21 Second
பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி (வயது 41). பண்ருட்டியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையின் விற்பனையாளர்.
இவர் வழக்கம்போல் மது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வந்தார். தனக்கு ஓசியில் மதுபாட்டில் தருமாறு கேட்டார். ஆனால் புண்ணியமூர்த்தி மறுத்துவிட்டார்.
இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார். அருகில் இருந்த பீர்பாட்டிலை எடுத்து புண்ணியமூர்த்தியை குத்திவிட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த புண்ணியமூர்த்தி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவசுப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து தணிகைவேல் என்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Average Rating