கூடுவாஞ்சேரி வியாபாரி கொலையில் மனைவி கைது: 7 மாதத்துக்கு பின் சிக்கினார்!!

Read Time:1 Minute, 53 Second

f915616d-3054-4a6c-8fcf-560591577185_S_secvpfகூடுவாஞ்சேரியை அடுத்த பாண்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரங்கன் (வயது 42). அதே பகுதியில் மளிகை கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லட்சுமி. கடந்த மார்ச் 9–ந்தேதி வீட்டில் இருந்த ரங்கனும், லட்சுமியும் திடீரென மாயமானார்கள்.

இதுகுறித்து ரங்கனின் தம்பி ராஜேந்திரன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் மார்ச் 12–ந்தேதி காலை முட்டுக்காடு கால்வாயில் வெட்டுக் காயங்களுடன் ரங்கன் பிணமாக கிடந்தார்.

விசாரணையில், கள்ளக்காதலில் ரங்கனை மனைவி லட்சுமியே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 7 மாதமாக லட்சுமி தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையே கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சுற்றிய லட்சுமியை இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருப்போரூரை அடுத்த மேலையூரை சேர்ந்த சதீசை போலீசார் தேடிவருகிறார்கள். இவர் ஓய்வு பெற்ற சப்– இன்ஸ்பெக்டரின் மகன் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கத்தி முனையில் என்ஜினீயரிங் மாணவனிடம் லேப்டாப்– செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!!
Next post அம்மணி நட்பில் விரிசில் வராமல் இருந்தா சரி!!