கத்தி முனையில் என்ஜினீயரிங் மாணவனிடம் லேப்டாப்– செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!!
Read Time:1 Minute, 5 Second
ஆந்திராவை சேர்ந்தவர் சாய்பிரசாத். இவரது நண்பர் அவினாஸ். இருவரும் ஊரப்பாக்கம் பிரியா நகரில் தங்கி பெத்தேரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அவினாஷ் அறையில் தனியாக இருந்தபோது 3 பேர் கும்பல் கத்திமுனையில் மிரட்டி, 2 லேப்டாப், செல்போனை பறித்து தப்பிச்சென்றனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்– இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மணிகண்டன், ராகுல் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து லேப்டாப், செல்போன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Average Rating