மதுரை அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர்!!
Read Time:1 Minute, 18 Second
மதுரை ராசாக்கூர் அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் தீபா (வயது20). சிவகாசி அருகே உள்ள தமராக்கியை சேர்ந்தவர் வன்னிமுத்தன் (26). இருவரும் உறவினர்கள்.
தீபா வீட்டிற்கு அடிக்கடி வந்த வன்னிமுத்தன் அவரிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதில் தீபா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் வன்னிமுத்தனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தீபா வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து தீபா திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating