திருப்பூரில் பிளஸ்–2 மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த 2½ வயது சிறுமி சாவு!!
திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரின் 2½ வயது மகள் தீபிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவர் விக்ரம்(வயது 16). கடந்த 17–ந் தேதி தீபிகா மட்டும் வீட்டில் தனியே இருந்தாள்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த விக்ரம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.
உடனே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்து பொள்ளாச்சியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
அவன் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடல் நலம் தேறி வந்ததால் சிறுமியை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். அதைத்தொடர்ந்து டெல்லிக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் உடல் நலம் திடீரென்று பாதிக்கப்பட்டது. உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சிறுமி பாலியல் பலாத்காரம் காரணமாக இறந்தாளா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.
Average Rating