சேலம் அருகே 2 பெண்கள் மாயம்!!
சேலம் காட்டூர் சாமி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருத்திகா (வயது 18). இவர் சேலம் அருகே உள்ள எருமாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த 30–ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பெற்றோர் அக்கம் பக்கம் தேடினர். எங்கும் அவர் இல்லை. பின்னர் இதுபற்றி பெற்றோர் சேலம் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம் அன்னதானப் பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாப்பா(வயது 65). மனநிலை பாதித்தவர். கடந்த 23–ந்தேதி இவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். எங்கும் அவர் இல்லை. இதுபற்றி சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating