பெண்களை செல்போனில் பேச வைத்து உல்லாசத்துக்கு அழைத்து வழிப்பறி: வாலிபர் கைது!!
கூடுவாஞ்சேரியை அடுத்த பனங்காட்டுபாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது தம்பி ஜெயச்சந்திரன். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அருங்கால்காப்பு காட்டு பகுதியில் 4 பேர் கும்பல் வழிமறித்து தாக்கினர்.
பின்னர் 2 பேரையும் மரத்தில் கட்டிப்போட்டு விட்டு ரூ.2 ஆயிரம், செல் போன், பைக்கை பறித்து விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ரத்தீஷ், திருச்சியை சேர்ந்த அமுதா, நந்திவரம் கவிதா, பவித்ரா உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் இளம் பெண்களை செல்போனில் குறிப்பிட்ட ஆண்களுடன் பேச வைத்து உல்லாசத்துக்கு காட்டுப்பகுதியில் அழைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினோத்குமாரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பதுங்கி இருந்த வினோத்குமாரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating