பீகாரில் தசரா விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் பலி!!

Read Time:1 Minute, 38 Second

902234762biharபீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த தசரா விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான நேற்று, ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

இதனைக் காண, சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், குழந்தைகளுடன் வந்திருந்தனர். இதில், அம்மாநில முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை கண்டு ரசித்து விட்டு, மைதானத்தை ஒட்டியுள்ள குறுகலான வழியாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி இருபது பெண்கள், பத்து குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் 26 பேர் படுகாயமடைந்தனர். பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமர் மோடியின் மாற்று விமானத்தில் வெடிகுண்டு!!!
Next post மெரீனாவில் கொலையுண்ட கார் டிரைவர்: கள்ளக்காதல் தகராறில் மனைவியே தீர்த்து கட்டினார்!!