அனைவருக்கும் வை-பை மற்றும் ஹை-பை தேவைப்படுகிறது-ஆனால் நாட்டுக்கு தூய்மை தேவைப்படுகிறது: மோடி!!

Read Time:1 Minute, 59 Second

aaa5e3d7-dd78-4bb7-9c6b-63a3c1ddcc11_S_secvpfமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அங்கு ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதப் பிரதமர் மோடி அங்குள்ள பீட் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை இன்று துவக்கினார். அங்கு அவர் பேசியதாவது;

“இன்று நாட்டிலுள்ள அனைவருக்கும் வை-பை மற்றும் ஹை-பை தேவைப்படுகிறது. ஆனால் நாட்டுக்கோ தூய்மை தேவைப்படுகிறது. மக்களே உங்களை பார்த்து கேட்கின்றேன். இன்றைய இளைஞர்களை பார்த்து கேட்கின்றேன். மகாராஷ்டிரா மாநிலத்தை காக்கவேண்டுமா இல்லையா? சொல்லுங்கள்.

உங்கள் மாநிலத்தை சேர்ந்த கோபிநாத் முண்டே மறைந்தது குறித்து கவலை கொள்ளாதீர்கள். கடவுளுக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இங்குள்ள குழந்தைகள் அனைவரும் கோபிநாத் முண்டே தான். சென்ற தேர்தலில் நிலையான ஆட்சிக்கு வாக்களித்தீர்கள். ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்களை பற்றி கவலைப்பட்டார்களே தவிர உங்களை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் 60 மாதத்திற்குள் இந்தியா சந்திக்கும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று நான் இத்தருணத்தில் உறுதியளிக்கின்றேன்.” என்று மோடி பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாமி கும்பிட சென்ற மாணவனை திருடன் என நினைத்து அடித்து உதைத்த போலீஸ்காரர்!!
Next post ஜெயலலிதாவை விடுதலை செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு!!