தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு!!

Read Time:1 Minute, 47 Second

556739b8-4e8f-4680-8a6e-940e764c5ad6_S_secvpfதிருச்சியில் ரெயில்வே அதிகாரியாக இருப்பவர் அமுதா (35). நேற்று இரவு அமுதா திருச்சியில் இருந்து தாம்பரம் வந்தார். கிண்டி செல்வதற்காக 11 மணி அளவில் மின்சார ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்பட தயாரானது.

அப்போது, அந்த பெட்டியில் இருந்த ஒருவர் பெண் அதிகாரி அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கீழே குதித்து தப்பி ஓடினார்.

உடனே, திருடன்… திருடன் என்று அமுதா கத்தினார். ரெயில்வே போலீசாருக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் நடத்தினார்கள். அப்போது, 7–வது பிளாட்பாரத்தில் போலீசாரை கண்டதும் பதுங்கிய ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவனுடைய பெயர் சுரேஷ் குமார் என்பதும், ரெயில்வே அதிகாரி அமுதாவிடம் நகைபறித்த கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்யப்பட்டது.

அவன் எந்த பகுதியை சேர்ந்தவன், இதற்கு முன்பு ரெயில்வே பயணிகளிடம் கைவரிசை காட்டி இருக்கிறானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவிலும் தூய்மை பணி திட்டம்: பா.ஜனதா தொடங்கியது!!
Next post குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண்!!