கணவரை பிடிக்காததால் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்ட நரிக்குறவ பெண் தற்கொலை!!
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அருகே உள்ள மலைப்பிரதேசத்தில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது.
இப்பகுதியை சேர்ந்தவர் தெய்வானை(வயது 20). நரிக்குறவர் இன வழக்கப்படி தெய்வானைக்கு ஏலம் மூலம் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி அதே பகுதியை சேர்ந்த சூரியகுமார்(30) என்பவர் தெய்வானையை ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
அதிக தொகைக்கு ஏலம் எடுத்தவர் என்ற அடிப்படையில் சூரியகுமாருக்கு தெய்வானையை கடந்த மாதம் திருமணம் செய்து கொடுத்தனர்.
ஆனால் இந்த திருமணத்தில் தெய்வானைக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. உறவினரும், பெற்றோரும் பலமுறை சமாதானப்படுத்தி திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
ஆனாலும் தனக்கு அதில் விருப்பமில்லை என்று தெய்வானை கூறி வந்துள்ளார்.
இதையறிந்த பெற்றோர் நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என எண்ணி, தெய்வானையை சமரசம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை யாரும் இல்லாத நேரத்தில் தெய்வானை விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். பின்னர் அங்கு வந்த அவரது குடும்பத்தினர் தெய்வானையை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெய்வானைக்கு திருமணமாகி 20 நாட்களே ஆவதால் திருப்பத்தூர் சப்–கலெக்டர் ஷில்பா பிரபாகர் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating