மெரீனாவில் கொலையுண்ட கார் டிரைவர்: கள்ளக்காதல் தகராறில் மனைவியே தீர்த்து கட்டினார்!!
மெரீனா கடற்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் (28), நெற்குன்றத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கார் டிரைவரான இவர் மீது வாலாஜாபாத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய வழக்கும் உள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட கார்த்திக், மனைவி ஜெயபாரதியுடன் பாடிக் குப்பத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இக்கொலை சம்பவம் குறித்து மெரீனா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கார்த்திக்கின் மனைவி ஜெயபாரதியிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்கு பின்னாக பல தகவல்களை கூறினார். இதனால் ஜெயபாரதி மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஜெயபாரதிக்கும், இன்னொருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்த்திக்கின் போதை பழக்கமே, ஜெயபாரதியை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரது கள்ளக்காதலுக்கு கார்த்திக் இடையூராக இருந்துள்ளார். இதனால் அவரை திட்டம் போட்டு ஆட்களை ஏவி ஜெயபாரதி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து ஜெயபாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
கணவர் கார்த்திக்கை கொலை செய்வதற்கு ஜெயபாரதியின் கள்ளக்காதலனும் அவரது கூட்டாளிகள் சிலரும் உதவிகள் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
Average Rating