குடிகாரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! – த்ரிஷா முழக்கம்!!

Read Time:1 Minute, 46 Second

imagesஇதுவரை நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள் என்று குரல் கொடுத்து வந்த த்ரிஷா, தற்போது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் என்றும் குரல் கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் சாலைகளில் விபத்து ஏற்படுவதோடு, நடந்து செல்லும் அப்பாவி மக்களும் விபத்துக்கு ஆளாகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை குடித்து விட்டு எனது டிரைவரே வாகனம் ஓட்டினாலும் அவரை நான் போலீசில் ஒப்படைப்பேன்.

மேலும், நான் குடிப்பவர்களுக்கு எதிரி அல்ல. குடிக்க வேண்டும் என்றால், வீட்டிற்கு சென்று குடித்து விட்டு தூங்கிவிடலாம்.

அதை விடுத்து பணியில் இருக்கும்போது குடிப்பதால்தான் விபத்துக்கள் நேரிடுகிறது என்று கூறியுள்ள த்ரிஷா, ஐதராபாத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டிலும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோழவந்தானில் காதல் மனைவி மீது தாக்குதல்: கணவர் மீது புகார்!!
Next post கிளிமஞ்சாரோ மலையில் ஏறி 12 வயது ஆந்திர சிறுமி சாதனை!!