அமெரிக்காவிலும் தூய்மை பணி திட்டம்: பா.ஜனதா தொடங்கியது!!

Read Time:1 Minute, 29 Second

427353c5-89a5-48b3-8457-2a5aa182900d_S_secvpf (1)இந்தியாவில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மையான இந்தியா பணியை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தூய்மை பணி நடைபெற்றது. இப்பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தூய்மை திட்டத்தை அமெரிக்காவிலும் பா.ஜனதா தொடங்கி வைத்தது. அங்குள்ள நியூயர்க்கில் மேன்ஹாட்டனில் 52–வது தெருவில் 2 மற்றும் 3–வது அவென்யூவில் இந்த தூய்மை பணி நடந்தது.

இந்த திட்டத்தை பா.ஜனதாவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் விஜய்ஜோலி தொடங்கி வைத்தார்.

அதில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். இப்பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதே போன்று அமெரிக்காவிலும் சுற்றுப்புற சூழ்நிலை சுத்தப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதாக விஜய்ஜோலி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதாவை விடுதலை செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு!!
Next post தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு!!