குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண்!!
திண்டுக்கல் அஞ்சுகுழிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அமுதவேல். டிரைவராக உள்ளார். அவரது மனைவி முனீஸ்வரி (வயது 25). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
நேற்றும் வழக்கம் போல் பிரச்சினை வெடித்தது. இதனால் மனமுடைந்த முனீஸ்வரி தற்கொலை செய்வது என தீர்மானித்தார்.
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முனீஸ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் வேதனையால் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடல் வெந்த நிலையில் உயிருக்கு போராடிய முனீஸ்வரியை தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating