கிளிமஞ்சாரோ மலையில் ஏறி 12 வயது ஆந்திர சிறுமி சாதனை!!
Read Time:1 Minute, 19 Second
ஆப்பிரிக்கா நாட்டில் தான்சானியா மாகாணத்தில் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 891 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் உயரம் 19 ஆயிரத்து 349 அடி ஆகும்.
எந்த மலையுடன் ஒட்டாத உலகிலேயே உயரமான மலையாக கிளிமஞ்சாரோ திகழ்கிறது.
இந்த மலையின் சிகரத்தில் 12 வயது இந்திய சிறுமி ஏறி சாதனை படைத்து உள்ளார். அந்த சிறுமியின் பெயர் ஜானவி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆதிவாசி பெண்.
காந்தி ஜெயந்தி அன்று மலை உச்சியை அடைந்த அவர் அங்கு மகாத்மா காந்தியின் உருவ படத்துடன் இந்திய தேசிய கொடியை நட்டார்.
அதோடு காந்தியின் கொள்கை வாசக பதாகைகளையும் வைத்தார்.
மிக சிறிய வயதில் மலை ஏறி சாதனை படைத்த முதல் சிறுமி ஜானவி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சாதனைக்கு பல அமைப்புகள் பாராட்டு தெரிவித்து உள்ளது.
Average Rating