சோழவந்தானில் காதல் மனைவி மீது தாக்குதல்: கணவர் மீது புகார்!!
Read Time:1 Minute, 2 Second
சோழவந்தான் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்தவர் பேபிராணி (வயது 31). இவர் கடந்த 7 ஆண்டிற்கு முன்பாக பழைய பாத்திர வியாபாரி மைதீன் மகன் சாகுல் ஹமீது (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கணவன்–மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று சாகுல் ஹமீது, பேபிராணியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து முகம் மற்றும் உடல் முழுவதும் காயப்படுத்தி தப்பியோடி விட்டார். இது குறித்து பேபிராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் சோழவந்தான் சப்–இன்ஸ்பெக்டர் குணசீலன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சாகுல் ஹமீதை வலைவீசி தேடி வருகின்றார்கள்.
Average Rating