வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடிகள் கைது!!
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூர் முத்துபட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 32). இவர் திண்டுக்கல்லில் உள்ள எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளி எதிர்புறம் நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜெகனிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். 2 பேரையும் மடக்கிபிடித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பிரபல ரவுடிகள் என்றும், திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி, கோபாலசமுத்திரம் மேற்குகரை சேர்ந்த கொட்டகாசி என தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் ரெட்டலைபாறையை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் சிறுமலை பிரிவு அருகே நின்றுபோது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டினார். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
Average Rating