மேகாலயாவில் கொடூரம்: மகளை கற்பழித்து தலையை வெட்டிக்கொன்ற தந்தை!!

Read Time:1 Minute, 59 Second

caf2271d-795d-41d1-bf6b-622e57c94e56_S_secvpfமேகாலயாவில் கரோ ஹில் பகுதியில் காணாமல் போன 15 வயது பெண் தலை வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அடர்ந்த காட்டில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றினர்.

ஆடையற்ற நிலையில் காணப்பட்ட அப்பெண் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள போலீசார், அப்பெண்ணின் தந்தையே அவளை கற்பழித்து கொன்றிருக்ககூடும் என்று அவளது தாயாரே புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர். தனது கணவர் பெற்ற மகள் என்றும் பாராமல் அவளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக அத்தாய் தனது புகாரில் கூறியுள்ளார்.

முன்னதாக தனது மகளை வில்லியம் நகரில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து விட்டு பின் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியதாகவும், தனக்கு வேறு வேலை இருந்ததால் தான் மார்கெட் பகுதிக்கு சென்றதாகவும் கூறிய பெண்ணின் தந்தை அதன் பிறகு தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பெண்ணின் தாயார் அளித்துள்ள புகாரின் பேரில் தற்போது அவளது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் அவர் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு போடுவது என்று போலீசார் முடிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னைத் தானே திருமணம் செய்த பெண்!!
Next post கணவரின் சந்தேகம்: மனைவி மாயம்!!