ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி ஈரோடு மேயர் அங்கபிரதட்சணம்!!

Read Time:2 Minute, 10 Second

7049d442-e302-4efa-88e6-cce2f5a0a418_S_secvpfஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி சார்பில் மகளிரணி மாவட்ட செயலாளரும், ஈரோடு மேயருமான மல்லிகா பரமசிவம் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் அங்கபிரட்சணம் செய்து அம்மனை வழிபட்டார். இதில் அவர் தரையில் படுத்து உருண்டு கோவிலை சுற்றி வந்தார். அப்போது மகளிரணியினர் ‘‘ஓம்சக்தி, ஓம் சக்தி’’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது.

இதனை துணை மேயர் கே.சி. பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் கேசவமூர்த்தி, தொகுதி செயலாளர் எம்.ஜி. பழனிச்சாமி, மகளிரணி நிர்வாகிகள் விஜயா, லட்சுமி, தேவிகா ராஜேந்திரன் மற்றும் சின்னகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி அ.தி.மு.க.வினர் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், மண்டல தலைவருமான பொயார் நகர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, மேயர் மல்லிகா, துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, கவுன்சிலர்கள் தங்கவேல், சுப்பிரமணி, பழமண்டி பாலமுருகன், குப்புசாமி, நாச்சிமுத்து மற்றும் சேது, நீவா மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 ஆண்டுகள் குடலில் இருந்த ஊசி!!
Next post காம்பவுண்ட் சுவரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்ட மானேஜர் மீது தாக்குதல்: 9 பேர் கைது!!